Saturday, April 16, 2022

 

 


சாண்டில்யன் (அராலியூர் கந்தர் பாலநாதன்)

கதிரவன் குடும்பம்

ஆதவன் குடும்பத்தில்,

கைக்கிளைக் காதலில்,

வலம் வரும், நாற்குண பெண்களில்,

பாசத்தோடு பவனிவரும் புவிமாதாமேல்

பாய்வதோ விண்கற்கள்,

 நீலவான மின்பார்வை பூவியை நோக்க,

மாலை நேரத் தென்றல் மலர்களைத் தழுவிவர,

வானம்பாடிகள் இசைபாடிப் பறந்து செல்ல,

மாதவனின் மேல் நோக்கிய கண்களோ

வான மாற்றத்தை உணர்ந்தன,

 வெண்தாமரை போல தோன்றினாள்

வெள்ளி ஆடை சூழ்ந்த திங்கள்,

 மாதவன் சிந்தையில் உதித்ததோ,

பல கேள்விகள்,

 புவித்தாய் மேல் பாயும்

விண்கற்கள் மொய்ப்பு மத்தியில்,

ஆதவன் குடும்பத்தின் மாறும் சமநிலை,

நிலைக்குமா,  சிதைந்துவிடுமா?


No comments:

Post a Comment

  To:   Rajapaksa Clan                                                                                                                      ...